நியூசிலாந்தில் பரிதாப சம்பவம்; சிறுமியை 100 தடவை கடித்துக்குதறிய நாய்கள்
நியூசிலாந்து நாட்டில் ஆக்லாந்து பகுதியில் வடக்கு தீவில் அமைந்துள்ள முரூபரா நகருக்கு நண்பர்களை பார்ப்பதற்காக ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சென்றனர்.தங்களுடன் ஒரே மகள் சகுராகோ உகாரா(7) என்பவளை அழைத்துச் சென்றார்கள். ஆனால் விருந்திற்கு சென்ற வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட 4 நாய்கள் ஆவேசம் கொண்டு சிறுமியை கடித்துக் குதறின. அதில் சிறுமியின் உடல் முழுக்க 100 காயங்கள் ஏற்பட்டன.
மிகவும் ஆபத்தான நிலையில் அவளை ஆக்லாந்து நகரிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறார்கள். சிறுமி இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று கூறும் டாக்டர்கள் தொடர்ந்து பல மாதத்திற்கு ஆபரேஷன் போன்ற சிகிச்சை பெற வேண்டும் என கூறி விட்டார்கள். சிறுமியின் சிகிச்சைக்கு ரூ.50 லட்சம் தேவைப்படும் என கருதப்படுகிறது. அதற்கு நிதி உதவி அளிக்க தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்து வருகின்றன.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
Green Anaconda - World's Biggest Snake Giant green anaconda is the heaviest snake on planet earth. Learn 10 Facts about these huge snak...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.