10 வயது சிறுமியை நிர்வாணமாக செல்போனில் படம் பிடித்த பாதிரியார்

பத்து வயது சிறுமியை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த கேரள தேவாலய பாதிரியாரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் கத்தோலிக்க மறைமாவட்டத்துக்கு உட்பட்ட தளிக்கட்டுச்சேரியிலுள்ள புதினி பவுல் தேவாலயத்தில் பாதிரியாக இருப்பவர் ராஜு கொக்கன் (44). இந்த இரு தினங்களுக்கு முன்பு தேவாலயத்துக்கு வழக்கமாக வரும் குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை நிர்வாணப்படுத்தி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சிடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து பாதிரியார் மீது சிறுமியின் பெற்றோர் திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் போலீஸார் பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.புகார் பற்றிய தகவலறிந்ததும் பாதிரியார் தலைமறைவாகிவிட்டார். போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்