நரேந்திர மோடியால் மட்டுமே நல்ல ஆட்சியை தர முடியும் : நடிகை சமந்தா பரபரப்பு பேச்சு
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில் நடித்திருப்பவர் சமந்தா. தற்போது விஜய் ஜோடியாக ‘கத்திÕ, சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்Õ ஆகிய படங்களில் நடிப்பதுடன் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திலும் ஜோடியாக நடிக்க பேச்சு நடக்கிறது. டோலிவுட் படங்களில் பிரபலமாக இருக்கும் சமந்தா, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு ஆதரவாக நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்யப்போவதாக தகவல் பரவியது.
இந்நிலையில் நடிகை சமந்தா நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் ஒரு தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆந்திர மாநிலத்தில் நடக்க இருக்கும் தேர்தல் குறித்து என்னை பேச வைத்து விமர்சனத்துக்கு ஆளாக்க வேண்டாம். நமக்குள்ள மாபெரும் சக்தி வாக்குரிமை மட்டுமே. இதை நாம் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க பயன்படுத்தி கொள்ள வேண்டும். நாட்டை ஆளும் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நாம் அனைவரும் ஓட்டு போடுவதில்தான் இருக்கிறது. இதை அனைவரும் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். எனக்கு சென்னையில் ஓட்டுரிமை இருக்கிறது. இதனால் நான் சென்னையில்தான் வரும் தேர்தலில் ஓட்டு போடுவேன் என்றார். பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு சமந்தா பதில் அளிக்கையில், Ôநாட்டில் நல்லாட்சி அமைய வேண்டும் என்றால் பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒருவரால் மட்டுமே முடியும். வரும் தேர்தலில் அவர் அபார வெற்றி பெறுவது உறுதி.
மேலும் நான் நடித்த தெலுங்கு திரைப்படமான ‘ஆட்டோ நகர் சூரியா‘, ‘மனம்‘ ஆகிய திரைப்படம் வெளி வர தயாராக இருக்கிறது. தமிழில் 2 படங்கள் நடித்து கொண்டிருக்கிறேன். பாலிவுட்டில் நடிக்கும் எண்ணம் இல்லை. கோடை காலம் என்பதால் மக்கள் அனைவரும் கதர் ஆடை அணிய வேண்டும். மேலும் அதிகளவில் தண்ணீர் குடித்து வெயிலில் தங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்Õ என்றார். அவரது இந்த கருத்து, உடன் நடிக்கும் ஹீரோக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமந்தாவுடன் நடிக்கும் படம் ரிலீசானால் அரசியல் இடையூறுகள் ஏற்படுமா என அந்த ஹீரோக்கள் அஞ்சுகின்றனர். - See more at: http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=1092#sthash.7EGK4fZT.dpuf
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
-
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ...
-
Four lions were left with their tails between their legs when a mongoose bravely took on the predators. Despite being under two feet tall, ...