90 அப்பாவி சிறுவர்களை கடத்தி கொடுமைப்படுத்திய நடிகர் விஜய். கோலிவுட் பரபரப்பு….!
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் கதை தற்போது இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
‘கத்தி’ திரைப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த இரண்டு வேடங்களில் ஒரு வேடம் வில்லன் வேடம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. நடிகர் விஜய் இதற்கு முன்னர் அழகிய தமிழ்மகன் படத்தில் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
‘கத்தி’ திரைப்படத்தில் வில்லன் விஜய் 90 அப்பாவி சிறுவர்களை கடத்தி சென்று கொடுமைப்படுத்துவதோடு அவர்களை பணயக்கைதிகளாக வைத்துக்கொண்டு அரசிடம் பேரம் பேசுவதாகவும், அவரது சதியை இன்னொரு விஜய் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் கதை என்று தெரியவந்துள்ளது.
இந்த கதையை முருகதாஸின் உதவியாளர் ஒருவர் சமீபத்தில் சென்னையில் உள்ள பார் ஒன்றில் போதையில் உளறியதை அருகில் இருந்து கேட்ட அவருடைய நண்பர்கள் மூலம் வெளியே கசிந்துள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் திடீரென கத்தி திரைப்படத்தின் கதை கசிந்துவிட்டதால் விஜய் மற்றும் முருகதாஸ் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் கதை தற்போது இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்...
-
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.