வாழைப்பழங்களில் கொடிய சிலந்திகள்: இங்கிலாந்து குடும்பம் அதிர்ச்சி
இங்கிலாந்தின் ஸ்டாபோர்ட்ஷயர் நகரில் வசித்துவரும் ஜேமி(31) மற்றும் கிறிஸ்டல் ராபர்ட்ஸ்(30) தம்பதியர் தாங்கள் வசிக்குமிடத்திற்கு அருகில் உள்ள சிறிய கடையில் வாழைப்பழங்கள் வாங்கியுள்ளனர். வீட்டிற்கு வந்ததும் பழங்கள் இருந்த அட்டைப்பெட்டியை ஜேமி பிரித்துள்ளார். அப்போது பழத்தின்மீது வெள்ளை நிறத் திட்டுகள் இருந்ததைக் கண்ட அவர் அவை ஏதோ பாதிப்பிலாத அச்சுகள் என்று எண்ணிவிட்டார்.
சிறிது நேரம் கழித்து அவற்றை உன்னிப்பாகப் பார்த்தபோதுதான் அந்த பழங்களைச் சுற்றிலும் சிலந்தி வலை பின்னப்பட்டிருப்பதையும், நூற்றுக்கணக்கான சிலந்திகள் அந்த வலையில் இருப்பதையும் கண்டு அதிர்ந்துபோனார். திடீரென அவை அனைத்தும் ஒன்றாக அசையத் தொடங்கியதும் திகில் படம் ஒன்றினைப் பார்ப்பதைப் போல் உணர்ந்த ஜேமி பதறி வீட்டைவிட்டு வெளியே ஓடினார். இவரைத் தொடர்ந்து இவரது மனைவியும், இரண்டு குழந்தைகளும் மிர்ரர்.கோ என்ற பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஆலோசனைப்படி வீட்டைவிட்டு வெளியேறினர்.
அதன்பின்னர் அங்கு வந்த அந்த நிறுவனத்தினர் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த சிலந்திகளை அழித்தனர். இவை பிரேசில் நாட்டைச் சேர்ந்த கொடிய அலையும் சிலந்திகள் வகையைச் சேர்ந்தவையாக இருக்கும் என்று அவர்கள் சந்தேகித்தனர். மிகவும் நச்சுத் தன்மை கொண்ட அந்த சிலந்திகளின் விஷம் ஒரு பாம்பினுடைய விஷத்தைவிட 30 மடங்கு அதிகம் என்று கூறப்படுகின்றது. இந்த சிலந்திகள் கடித்தால் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, உயர் ரத்த அழுத்தம், வாந்தி போன்றவற்றுடன் இறுதியில் மரணமும் ஏற்படக்கூடும் என்று மருத்துவத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
வீடு முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் கழிந்த பின்னரே அந்தக் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சிறிது நேரம் கழித்து அவற்றை உன்னிப்பாகப் பார்த்தபோதுதான் அந்த பழங்களைச் சுற்றிலும் சிலந்தி வலை பின்னப்பட்டிருப்பதையும், நூற்றுக்கணக்கான சிலந்திகள் அந்த வலையில் இருப்பதையும் கண்டு அதிர்ந்துபோனார். திடீரென அவை அனைத்தும் ஒன்றாக அசையத் தொடங்கியதும் திகில் படம் ஒன்றினைப் பார்ப்பதைப் போல் உணர்ந்த ஜேமி பதறி வீட்டைவிட்டு வெளியே ஓடினார். இவரைத் தொடர்ந்து இவரது மனைவியும், இரண்டு குழந்தைகளும் மிர்ரர்.கோ என்ற பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஆலோசனைப்படி வீட்டைவிட்டு வெளியேறினர்.
அதன்பின்னர் அங்கு வந்த அந்த நிறுவனத்தினர் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த சிலந்திகளை அழித்தனர். இவை பிரேசில் நாட்டைச் சேர்ந்த கொடிய அலையும் சிலந்திகள் வகையைச் சேர்ந்தவையாக இருக்கும் என்று அவர்கள் சந்தேகித்தனர். மிகவும் நச்சுத் தன்மை கொண்ட அந்த சிலந்திகளின் விஷம் ஒரு பாம்பினுடைய விஷத்தைவிட 30 மடங்கு அதிகம் என்று கூறப்படுகின்றது. இந்த சிலந்திகள் கடித்தால் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, உயர் ரத்த அழுத்தம், வாந்தி போன்றவற்றுடன் இறுதியில் மரணமும் ஏற்படக்கூடும் என்று மருத்துவத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
வீடு முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் கழிந்த பின்னரே அந்தக் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் கதை தற்போது இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்...
-
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.