பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம்
தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டுப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது. எந்த முறையிலும் அமர்ந்துகொள்ளலாம். நமக்கு சௌகரியமான முறையில். அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வது முக்கியம்.
தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கொள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம்செய்ய வசதியாக உள்ளதோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம். வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். கால்களை சம்மணமிட்டுக்கொள்ளுங்கள்.
இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள். அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள். உங்கள் முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள். மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள். கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.
கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தல் அவசியம். மந்திரங்களை ஒதும்பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது. ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.
நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும் பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும். மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன. நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தெரிந்தோ, தெரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.
மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் செல்ல வேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் துவங்க வேண்டும். கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம். இதனால், நாம் நம் மூச்சுக் காற்றை கவனிக்கத் துவங்கவேண்டும்.
மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் செய்யக்கூடாது. காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தெரிந்து நடந்திடக்கூடாது. மூச்சுக்காற்றை சுவாசிப்பதும், வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும். நம்முடைய இயற்கையான சுவாசத்தைக்கவனித்தல் மட்டுமே போதுமானது.
இதுதான் முக்கியம். இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறந்த வழி. எண்ணங்களுக்குப்பின்ஓடாதீர்கள் . கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.
சுவாசத்துடன் மட்டுமே இருங்கள். அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும். இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும். இந்நிலையில் . . .
ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது. எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார். இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது “எண்ணங்கள் அற்ற நிலை” என்றோ கூறுகிறோம். இதுதான் தியான நிலை.
இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும். தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப் பெறும். பிரபஞ்ச சக்தி உடல் முழுவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும். இதைத் தெய்வீக வடிவம் என்றும் கூறலாம்.
தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கொள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம்செய்ய வசதியாக உள்ளதோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம். வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். கால்களை சம்மணமிட்டுக்கொள்ளுங்கள்.
இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள். அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள். உங்கள் முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள். மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள். கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.
கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தல் அவசியம். மந்திரங்களை ஒதும்பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது. ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.
நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும் பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும். மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன. நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தெரிந்தோ, தெரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.
மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் செல்ல வேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் துவங்க வேண்டும். கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம். இதனால், நாம் நம் மூச்சுக் காற்றை கவனிக்கத் துவங்கவேண்டும்.
மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் செய்யக்கூடாது. காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தெரிந்து நடந்திடக்கூடாது. மூச்சுக்காற்றை சுவாசிப்பதும், வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும். நம்முடைய இயற்கையான சுவாசத்தைக்கவனித்தல் மட்டுமே போதுமானது.
இதுதான் முக்கியம். இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறந்த வழி. எண்ணங்களுக்குப்பின்ஓடாதீர்கள் . கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.
சுவாசத்துடன் மட்டுமே இருங்கள். அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும். இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும். இந்நிலையில் . . .
ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது. எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார். இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது “எண்ணங்கள் அற்ற நிலை” என்றோ கூறுகிறோம். இதுதான் தியான நிலை.
இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும். தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப் பெறும். பிரபஞ்ச சக்தி உடல் முழுவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும். இதைத் தெய்வீக வடிவம் என்றும் கூறலாம்.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் கதை தற்போது இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்...
-
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.