மனைவியை கற்பழித்து வீடியோ எடுத்து விபசாரத்துக்கு தூண்டிய கணவன்

மராட்டிய மாநிலம் தானே ராபடி பகுதியை சேர்ந்தவர் ரோஸ் இவருக்கும் மும்பையை சேர்ந்த  ஒரு வாலிபருக்கும் கடந்த 2013 ஆம் திருமணம் நடந்தது.திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனித்தது. போக போக கணவரின் மன நிலையில் ரோஸ் மாற்றம் கண்டார் எப்போதும் கணவர் பணத்தை மட்டுமே குறிக்கோளாக் எண்ணி இருந்தார். எப்படியாவது அதிகம் சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இதற்காக மனைவியை விபசாரத்தில் ஈடுபட வற்புறுத்தினார் இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஸ் இதற்கு மறுத்து வந்தார்.
இந்த நிலையில் ஒருநாள்  குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து  ரோசுக்கு கணவர் குடிக்க கொடுத்தார் இதில் மயங்கிய மனைவியை மற்ற ஆணகளிடம் பணம் பெற்று கொண்டு    கற்பழிக்க செய்து உள்ளார் அதை வீடியோவாக படமும் எடுத்து உள்ளார்.
இது போல் கணவர் கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு  மார்ச் 18 வரை மனைவியை இது போல் சித்ரவதை செய்து  விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார்.தொடர்ந்து தான் சொல்வதற்கு உடன்பட மறுத்தால்  வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மனைவியை மிரட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் ராபடி போலீசார்  கணவர் மீது 4 பிரிவுகளை வழக்குகள் பதிவு செய்து உள்ளனர் என்றும்  குற்றவாளி தலைமறைவாகி விட்டார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

வினோதங்கள்

இந்த வீடியோதான் இணையத்தில் சூப்பர்ஹிட்.. (கட்டாயம் பார்க்கவும்)

சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த வீடியோதான் இப்போது இணையத்தில் சூப்பர்ஹிட் மும்பைவாழ் திருநங்கைகளை ஹிஜ்ரா என்றழைக்கிற(...)