தேசிய கொடி ஏற்றவேண்டும் லண்டனில் மக்கள் போராட்டம்: திகைத்துப்போன BTF ! VIDEO
லண்டனில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடைபெற்றது. இதனை BTF ஏற்பாடு செய்திருந்தார்கள். இன் நிகழ்வுகள் ஆரம்பமாக முன்னர் தமிழீழ தேசிய கொடியை ஏற்றவேண்டும் என்று பெருமளவான மக்கள் பிரித்தானிய தமிழர் பேரவையினரிடம்(BTF) கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் அந்த அமைப்பில் உள்ள சில நபர்கள் இதனை எதிர்தார்கள். தமிழீழ தேசிய கொடியை ஏற்ற முடியாது என்றும், அது பிரித்தானிய அரசியல்வாதிகள் மத்தியில் அதிருப்த்தியை ஏற்படுத்தும் என்று BTF அமைப்பில் உள்ளவர்கள் கூற முற்பட்டார்கள். இதனை கடுமையாக எதிர்த தமிழ் மக்கள், இசைப்பிரியாவின் புகைப்படங்களை பார்த்தீர்களா ? அதனை BTF அமைப்பு தான் வெளியிட்டதாக நீங்கள் செதிகளையும் அனுப்பினீர்கள், ஆனால் தேசிய கொடியை மட்டும் ஏன் ஏற்ற மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.
இளையோர்கள் பலர் உடனே மேடைக்குச் சென்று தமிழீழ தேசிய கொடியை ஏந்தி, அதனை முறையாக ஏற்றிய பின்னரே முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை ஆரம்பிக்கலாம் என்று உறுதியாக கூறிவிட்டார்கள். தமிழீழ தேசிய கொடியை நாம் மறந்தால், எமது அடையாளத்தை இழந்தவர்களாக நாம் மாறிவிடுவோம் என்று அவர்கள் உரக்க கூறினார்கள். இதேவேளை தேசிய கொடியை , ஏற்ற தடை விதிக்கும் வகையில், ஒளிபரப்பியை BTF உறுப்பினர்கள் கொண்டுசென்று ஒளித்து வைத்துவிட்டார்கள். இதனை அறிந்த மக்கள் கடுமையாக ஆட்சேபித்தார்கள்.
இறுதியில் மக்கள் திரண்டு பெரும் ஆட்சேபத்தை தெரிவிக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் BTF உறுப்பினர்கள் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக வேலைசெய்வதாக பலர் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். மக்கள் மத்தியில் ஏற்பட்ட கடும் கொந்தளிப்பு காரணமாக , இறுதியில் BTF தலைவர்கள் ஓரமாக ஓடிச்சென்று சிலைக்கு பின்னால் ஒளிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் தமிழீழ தேசிய கொடி ஏற்றப்பட்டது. பின்னர் தான் முள்ளிவாய்க்கால் தின நிகழ்வுகள் நடைபெற ஆரம்பித்தது. இதோ காணொளி இணைப்பு.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் கதை தற்போது இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்...
-
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...