விஜய் நடிக்கும் கத்தி, ஜீவா நடிக்கும் யான் ஒரே கதையா…?!
சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த யாமிருக்க பயமே படமும், விரைவில் வெளிவரவிருக்கும் அரண்மனை படமும் ஒரே கதை. தயாரிப்பில் உள்ள முண்டாசுபட்டி, அப்புச்சி கிராமம் ஆகிய இரண்டு படங்களின் கதையும் ஒரே கதை என்ற தகவல் காதில் விழுகிறது. இந்நிலையில், ரவி கே சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் யான் படத்தின் கதையும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் கதையும் ஒரே கதை என்று கிசுகிசுக்கின்றனர் திரையுலகினர். இத்தனைக்கும் யான் படத்தின் கதையே ஏற்கனவே வெளியான மரியான் கதையை ஒத்திருக்கிறது என்ற சொல்லப்படுகிறது. யான் படத்தின் கதைப்படி வெளிநாட்டுக்கு செல்லும் ஜீவாவை தீவிரவாதிகள் கடத்திச் சென்று பிணயக்கைதியாக அடைத்து வைக்கின்றனர். அவர்களிடமிருந்து ஜீவா எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் யான் படத்தின் திரைக்கதை. கத்தி படத்தின் கதையிலும் இதே பிணயக்கைதிகள் சமாச்சாரம்தான். சுமார் 90 பேரை தீவிரவாதிகள் கடத்தின் சென்று ஒரு இடத்தில் பிணயக்கைதியாக அடைத்து வைக்கின்றனர். அவர்களை விஜய் மீட்பதுதான் கத்தி படத்தின் கதை. திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் யான் மற்றும் கத்தி படங்களுக்கு இடையில் சின்னசின்ன வித்தியாசங்கள் இருந்தாலும் ப்ளாட் என்னவோ ஒன்றுதான் என்கிறார்கள்.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் கதை தற்போது இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்...
-
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.